Saturday, July 27, 2024
HomeTamilமின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்!

மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்!

நாடளாவிய ரீதியில் பகலில் ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடமும் மின்வெட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை தொடரும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தெற்கு மற்றும் எல்ல சுற்றுலா வலயங்களுக்கு டிசம்பர் முதலாம் திகதி முதல் ஒரு மணித்தியால இரவு நேர மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், டிசெம்பர் 15ஆம் திகதி நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கியை தேசிய மின்வட்டத்துடன் இணைத்துக்கொள்வதன் மூலம் அனைத்து சுற்றுலா வலயங்களுக்கும், இரவு வேளைகளில் மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

அதேநேரம், நாடளாவிய ரீதியில் இரவு நேர மின்வெட்டு ஒரு மணி நேரம் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.

இதேவேளை, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular