Saturday, July 27, 2024
HomeTamilமின் வெட்டு தொடர்பில் வெளியான அறிவித்தல்!

மின் வெட்டு தொடர்பில் வெளியான அறிவித்தல்!

நாட்டில் நாளை முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, குறித்த தினங்களில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு பகல் வேளையில் 1 மணிநேரத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன், குறித்த பகுதிகளில் இரவு வேளைகளில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 7ஆம் திகதி பிற்பகல் 3 மணிமுதல் 6 மணிக்கு இடையிலான காலப்பகுதியில் ஒரு மணிநேரம் மின்துண்டிப்பு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular