நாட்டில் நாளை முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, குறித்த தினங்களில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு பகல் வேளையில் 1 மணிநேரத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
அத்துடன், குறித்த பகுதிகளில் இரவு வேளைகளில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 7ஆம் திகதி பிற்பகல் 3 மணிமுதல் 6 மணிக்கு இடையிலான காலப்பகுதியில் ஒரு மணிநேரம் மின்துண்டிப்பு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.