வார இறுதியில், ஒரு மணிநேர மின்தடையை அமுலாக்க, இலங்கை மின்சார சபைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, நாளையும், நாளை மறுதினமும், A முதல் L மற்றும் P முதல் W வரையான வலயங்களில், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 வரையான காலப்பகுதியில், ஒரு மணிநேர மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 14ஆம் திகதி குறித்த வலயங்களில், பகலிலும், இரவிலும் தலா ஒவ்வொரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.