Saturday, July 27, 2024
HomeTamilமீண்டும் பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பம்!

மீண்டும் பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பம்!

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பல வருடங்களின் பின்னர் இன்று (12) விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, சென்னையிலிருந்து புறப்பட்ட அலையன்ஸ் ஏர் விமானம், இன்று முற்பகல் 11.30க்கு யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமான சேவைகள் கொரோனா தொற்று மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்தன.

தற்போது 2,250 மில்லியன் செலவில் பலாலி சர்வதேச விமான நிலையம் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புதிய விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து பலாலிக்கான விமானங்கள் வாரத்தின் ஒவ்வொரு திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய தினங்களில் விமான சேவைகள் இடம்பெறவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular