Saturday, July 27, 2024
HomeTamilமுச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்படுமா?

முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்படுமா?

பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் புதிய விலையாக 400 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இருக்க கட்டணத்தை அதிகரிப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெட்ரோலின் விலை அதிகரிக்கும் போதோ அல்லது குறைக்கப்படும்போதோ அது முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பயணிகளும் முச்சக்கரவண்டி சாரதிகளும் கட்டணத்தில் குழப்பமடைகின்றனர். முச்சக்கர வண்டிகள் மற்றும் கட்டணங்கள் தொடர்பில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. நாங்கள் அத்தகைய நிலையிலும் இயங்கி வருகின்றோம் என கூறினார்.

அதேவேளை, பயணிகளிடம் நியாயமற்ற முறையில் கட்டணம் விதிக்கப்பட்டால், அவர்கள் கட்டணத்தை நிராகரித்து முச்சக்கர வண்டியில் பயணிக்க மறுக்கலாம் எனவும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular