முச்சக்கரவண்டி ஒன்றும், டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அளவ்வ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதான தாயும், 18 வயதான மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை உயிரிழந்த பெண்ணின் கணவரும், மற்றுமொரு மகனும் விபத்தில் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்க் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அளவ்வ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.