அஹுங்கல்ல, பலபிட்டிய தொடரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஹீனடிய ரயில் கடவையில் முச்சக்கர வண்டி ஒன்று தொடரூந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
ஹீனடிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று மூடப்பட்டதொடரூந்து கடவையை உடைத்துக்கொண்டு கொலன்னாவிலிருந்து காலி நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலுடன் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 40 வயதுடைய ஹீனடிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதுடன், அஹுங்கல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.