Saturday, July 27, 2024
HomeTamilமுன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல்!

முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் துணைவேந்தரின் மகன் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் கார் ஒன்று, பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மாணவர்களின் மோட்டார் சைக்கிள்களை மோதிவிட்டு சென்றதாகவும் இதன்போது அவர் குடிபோதையில் இருந்ததாகத் தெரிவித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உடனடியாக செயற்பட்ட பேராதனை காவல்துறையினர், மாணவர்களை அங்கிருந்து கலைத்துவிட்டு முன்னாள் துணைவேந்தரையும் அவரது மகனையும் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து முன்னாள் துணைவேந்தர் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், அவரது மகன் காவல்துறை பாதுகாப்பின் கீழ் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular