யாழில் போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் பகுதியில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசியதகவலினையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவழைப்பில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தெய்வனாயகம் மேனன் தலைமையிலான காவல்துறை குழுவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என உப காவல்துறை பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார்.
இதன் போது 5,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2022/12/image-16.jpg)