Saturday, July 27, 2024
HomeTamilயாழில் பெரும் தொகையான கஞ்சா மீட்பு!!

யாழில் பெரும் தொகையான கஞ்சா மீட்பு!!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்றைய தினம் 40 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கஞ்சாவை கடத்தி வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து படகு ஒன்றில் குருநகர் கடற்கரை பகுதிக்கு கஞ்சா கடத்தி வரப்பட்ட நிலையில், கடற்படையினரின் சோதனை நடவடிக்கையின் மூலம் கஞ்சா மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட இளைஞனையும், மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண காவல்துறையினரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular