Saturday, July 27, 2024
HomeTamilயாழில் போதை மாத்திரைகளுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது!

யாழில் போதை மாத்திரைகளுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது!

யாழில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் போதை மாத்திரைகளுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பளை காவல்துறையினரின் சோதனை நடவடிக்கைகளின் போது , 19 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்கள் 8 மற்றும் 10 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது , தமக்கு, மல்லாகம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் என தெரிவித்துள்ளனர்.

அவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மல்லாகம் பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் , போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 36 வயதுடைய பெண்ணொருவரை 40 போதை மாத்திரைகளுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் காவல்து நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular