Saturday, July 27, 2024
HomeTamilயாழ் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பல்!

யாழ் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பல்!

யாழ்ப்பாணக் கடற்பரப்பில் பயணித்த கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது.

யாழ்ப்பாணம் – மருதங்கேணியை அண்மித்த கடற்பரப்பில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த கப்பலில் பயணித்த சுமார் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை மீட்பதற்காக கடற்படையின் 4 கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்குள்ளான குறித்த கப்பலில் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மீனவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய கடற்படையினர் அங்கு விரைந்துள்ள நிலையில், அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற தகவல் இதுவரையில் வெளியாகவில்லை.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ். காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular