Saturday, July 27, 2024
HomeTamilவங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக வங்காள விரிகுடா மற்றும் வடக்கு அந்தமான் கடலில் பல நாள் படகுகள் கரை திரும்பவோ அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு உடனடியாக செல்லவோ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் இந்த விடயத்தினை அறிவித்துள்ளது.

அதேவேளை ஒக்டோபர் 20 ஆம் திகதி அன்று வடக்கு அந்தமான் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது 22ஆம் திகதியன்று மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular