முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளமையினால் தங்களது தரப்பு முட்டை வர்த்தகத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் என்டன் அப்புஹாமி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தங்களது செயற்பாடு காரணமாக எதிர்காலத்தில் பாரிய முட்டை தட்டுப்பாடு ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முட்டைக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அந்த விலைக்கு முட்டையை விற்பனை செய்ய முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.