Saturday, July 27, 2024
HomeTamilவளிமண்டலத்தில் தளம்பல்: மழை அதிகரிக்கும் சாத்தியம்

வளிமண்டலத்தில் தளம்பல்: மழை அதிகரிக்கும் சாத்தியம்

இலங்கையில் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் வலுவடைந்து வருவதன் காரணமாக இவ்வாறு மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular