வவுனியா – கனகராயன்குளம் பகுதியில், பேரூந்து ஒன்றும், டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று (24) அதிகாலை தங்காலையில் இருந்து, யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேரூந்து, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதில்15 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள், கிளிநொச்சி, வவுனியா மற்றும் மாங்குளம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைகாவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.