Saturday, July 27, 2024
HomeTamilவாகன விபத்தில் பெண் பலி!!!

வாகன விபத்தில் பெண் பலி!!!

மத்துகமவில் இருந்து ஹினிதும நோக்கிப் பயணித்த சிற்றூர்தியொன்று மீகஹதென்ன சந்தியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகஹதென்ன காவல்துறைனர் தெரிவித்தனர்.

வெளிநாடு செல்லும் பெண்ணொருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறக்கிவிட்டு இன்று (16) அதிகாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தோரே, இந்த விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

பயணத்தின்போது சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை, இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular