Saturday, July 27, 2024
HomeTamilவாகன விபத்து- காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பலி!

வாகன விபத்து- காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பலி!

வாகன விபத்தில் வாழைச்சேனை காவல் நிலைய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இவ் விபத்துச் சம்பவம் வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கொழும்பு வீதி மியாங்குளம் பகுதியில் வைத்து நேற்று மாலை (24) இடம்பெற்றுள்ளது.

கேகாலையிலுள்ள தனது வீட்டிலிருந்து கடைமைக்காக வாழைச்சேனை காவல் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பேரூந்துடன் மோதியதிலே காவல்துறை உத்தியோகத்தர் ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் 33 வயதுடைய அசங்க என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மரணமடைந்த காவல்துறை உத்தியோகத்தரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular