வார இறுதியில் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
சனி (22) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (23) 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை (24) நாடளாவிய ரீதியில் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி,A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு பகலில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும், இரவில் ஒரு மணித்தியாலமும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.