Saturday, July 27, 2024
HomeTamilவிசமிகளால் ATM இயந்திரம் உடைப்பு!!

விசமிகளால் ATM இயந்திரம் உடைப்பு!!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பகுதியில் அமைந்துள்ள ATM இயந்திரத்தின் கண்ணாடி உடைத்து சேதப்படுத்தியமை தொடர்பில் வங்கி முகாமையாளரால் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உள்ள உடையார் கட்டு சந்திக்க அருகாமையில் அமைந்துள்ள ATM இயந்திரத்தின் கண்ணாடியை நேற்று இரவு விசமிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் புதுக்குடியிருப்பு இலங்கை வங்கியின் முகாமையாளரால் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்து, இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

ATM இயந்திர பகுதிக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் சந்தேகநபர்களில் ஒருவரை காவல்துறையினரால் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular