நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு, தமது சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காக, விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
வழமையான, தூரப்பிரதேச புகையிரத சேவைகளுக்கு மேலதிகமாக, இந்தத் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக புகையிரத போக்குவரத்து பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாளை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை, இந்த புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளன
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை 3 சிறப்பு புகையிரதங்களும், கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை 3 சிறப்பு புகையிரதங்களும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு கோட்டையில் உள்ள காங்கேசன்துறைக்கு சிறப்பு புகையிரதமும், காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சிறப்பு புகையிரதமும் இணைக்கப்பட்டுள்ளது.