Saturday, July 27, 2024
HomeTamilவிமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள துப்பாக்கி தோட்டா!!

விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள துப்பாக்கி தோட்டா!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் போக்குவரத்துப் பகுதியில் அமைந்துள்ள ஆண்களுக்கான கழிவறையில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி தோட்டா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர் அதை அவதானித்ததையடுத்து, விமான நிலைய பாதுகாப்புப் படையினர், பயன்படுத்தப்படாத அந்த தோட்டாவை, விமான நிலைய காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

அதேவேளை,நேற்று புத்தளத்தில் தேவாலயங்களுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளில் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் – மாதம்பை புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நத்தார் வழிபாட்டின்போது எட்டு தேவாலயங்களுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளை பரிசோதித்தபோது, சிறிய கறுப்புப் பெட்டியொன்றில், இரண்டு ரீ-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாதம்பை காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒரு வெள்ளை பைக்குள் இந்த சிறிய பிளாஸ்டிக் பெட்டியை கண்டுபிடித்ததாகவும், அதை திறந்து பார்த்தபோது, அதனுள் தோட்டாக்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கெண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular