பெருந்தோட்ட பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு சட்டரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி நுவரெலியாவில் இன்று போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தினர் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1987 ஆம் ஆண்டு முதல் நிர்மாணிக்கப்பட்ட 37 000 பெருந்தோட்ட வீடுகளுக்கு உறுதிப்பத்திரத்தை வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.