கோப்பாய் – கைதடி பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று கோப்பாய் கைதடி வீதியில் மரநடுகையில் ஈடுபடுவதற்காக சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில் குறித்த தனியார் தொண்டு நிறுவனத்தின் ஊழியர்கள் இவருவருக்கு சிறியளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.