பதுளை – பசறை பகுதியில் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருவர் கைதானார்.
அவரிடம் இருந்து, 5 கிராம் 610 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, கட்டுநாயக்க – ஆடியம்பலம் பகுதியில் வீடுகளை உடைத்து களவாடி வந்த பலுமுணா எனப்படும் காலிங்க மதுஷான் கட்டுநாயக்க காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆடியம்பலம் – வல்பொல பகுதியைச் சேர்ந்த 32 வயதான சந்கேகநபர், உந்துருளி ஒன்றை களவாடிச் சென்றபோது, கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அவர் களவாடிய இரு உந்துருளிகளும் அடகு வைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அதேவேளை, கல்முனை பகுதியில், ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா போதைப்பொருளை சூட்சுமமாக கொண்டு செல்ல முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை தலைமையக காவல்துறையினருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் நேற்றிரவு இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து, 6,680 மில்லிகிராம் ஹெரோயின், 2 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருகளும், 29 ஆயிரத்து 700 ரூபா பணத்துடன் கைபேசி ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைதானவர் 35 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்