Saturday, July 27, 2024
HomeTamil14 நாட்களுக்கு தடையின்றி மின்சாரம்

14 நாட்களுக்கு தடையின்றி மின்சாரம்

க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் 14 நாட்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவத்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (17) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைக் குறிப்பட்டார்.

மேலும், பரீட்சை எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் குறித்த பரீட்சையுடன் தொடர்புடைய கையேடுகளை விநியோகித்தல், விரிவுரைகள் மற்றும்; கருத்தரங்குகள் நடாத்துதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.

இவற்றை மீறுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பாக தகவல் இருந்தால் பரீட்சை திணைக்களத்தின் 1911 என்ற உடனடி தொலை பேசி, 0112 785212 அல்லது 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, க.பொ.த உயர்தரப் பரீட்சை இம்மாதம் 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular