60,000 மெற்றிக் டன் நிலக்கரி ஏற்றிய கப்பல் புத்தளம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
மொசாம்பிக்கில் இருந்து 14 மில்லியன் டொலர் பெறுமதியான நிலக்கரி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, அந்த கப்பலில் உள்ள நிலக்கரியை தரையிறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் செஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது, நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 பிறப்பாக்கிகளும் இயங்கத் தேவையான நிலக்கரி தொடர்ச்சியாக விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதத்தில் இலங்கைக்கு வரவிருக்கும் ஆறு நிலக்கரி கப்பல்களில் முதலாவது கப்பல் தற்போது துறைமுகத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.