200 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் ஆகியவை இலங்கை கடற்படையினரால் தெவுந்துறை கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டுள்ளன.
காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே குறித்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
உள்ளூர் இழுவை படகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அதிலிருந்தே 200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் உள்ளூர் மீன்பிடி இழுவை படகும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.