பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 38 மேலதிக தொடரூந்துகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்போது குறுகிய தூர பயணங்களை விட, நீண்ட தூர பயணங்களுக்காக முன்னுரிமை வழங்கப்படுவதாக மேலதிக தொடரூந்து சேவைகள் பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
விசேட தொடரூந்துகள் தவிர நீண்ட தூர தொடரூந்து சேவைகள் வழமை போல இடம்பெறும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட தூர பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.