தெற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் 4,586 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியாகும் என கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த கடற்பரப்பில், சுமார் 128 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருளும், 106 கிலோகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டிருந்தது.
கடற்படை முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த போதைப்பொருள்களுடன் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தங்காலை, நாகுளுகமுவ, கொஸ்கொட மற்றும் பலபிட்டி பகுதிளைச் சேர்ந்த 29 முதல் 59 வரையான வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் கடற்படையினரால் முன்னனெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் மொத்தமாக 28.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிக போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.