Saturday, July 27, 2024
HomeTamil21வயதுடைய இளைஞன் பலி!!

21வயதுடைய இளைஞன் பலி!!

தந்தையின் தாகம் தீர்க்க தென்னை மரத்தில் ஏறிய 21வயதுடைய இளைஞன் தவறி விழுந்து பலியான சம்பவமொன்று ஞாயிற்றுகிழமை மாலை (11) இடம்பெற்றுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி தந்தையும் மகனும் சித்தாண்டியிலுள்ள மரக்கறி விற்பனை நிலையத்திற்கு சென்றபோது தந்தைக்கு உடற்சோர்வுடன் களைப்பும் ஏற்பட்டதால் தாகத்தை தணிக்க அருகிலுள்ள சுமார் 20 அடி உயரமுள்ள தென்னை மரத்தில் இளனி ஆய்ந்து கொடுப்பதற்காக மகன் ஏறியநிலையில் தந்தை பார்த்துக்கொண்டிருக்கும் போதே மகன் தவறி விழுந்து உணர்விழந்துள்ளார்.

உடனடியாக மாவடிவெம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகன் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular