Saturday, July 27, 2024
HomeTamilசைபர் தாக்குதல் தொடர்பான விரிவான விசாரணை ஆரம்பம்

சைபர் தாக்குதல் தொடர்பான விரிவான விசாரணை ஆரம்பம்

அரச மின்னஞ்சல் முகவரிகளை இலக்கு வைத்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 26ஆம் திகதி சைபர் தாக்குதல் காரணமாக பல அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் பரிமாற்ற தரவுகள் காணாமல் போயுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்திருந்தது.

gov.lk டொமைனுக்குச் சொந்தமான தரவு அமைப்பை புதுப்பிக்கத் தவறியதன் காரணமாக தாக்குதலைத் தடுக்க முடியவில்லை என அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை, சைபர் தாக்குதலை நடத்திய குழுவின் தகவல்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular