Saturday, July 27, 2024
HomeTamilதேடி பிடித்து ஹர்திக் பாண்ட்யா கொடுத்த அன்பு பரிசு!!

தேடி பிடித்து ஹர்திக் பாண்ட்யா கொடுத்த அன்பு பரிசு!!

வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்த இக்கட்டான சூழலில் 3-வது போட்டியில் இரு அணிகளும் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது நெழிச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.

இந்த போட்டிக்கு முன்பு ஹர்திக் பாண்ட்யா பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் அடித்த பந்து ஒரு சிறுமியை தாக்கியது. உடனே அந்த சிறுமி பிசிசிஐ-ன் மருத்துவ குழுவை அனுகினார். பின்னர் அந்த சிறுமியை போட்டி முடியும் வரை காத்திருங்கள் என்று பாண்ட்யா கூறினார். பின்னர் போட்டி முடிந்த பிறகு அந்த சிறுமிக்கு அவர் கையெழுத்திட்ட பந்தை அவர் பரிசாக வழங்கினார். அதை வாங்கி கொண்ட சிறுமி மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்.

திலக் வர்மாவை அரை சதம் அடிக்க விடாமல் செய்து விட்டதாக ஹர்திக் பாண்ட்யா மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular