Saturday, July 27, 2024
HomeTamil8.4 கோடி ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

8.4 கோடி ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

பேலியகொட – லக்சிறி கொள்கலன் முனையத்தில் வைத்து நேற்று சுமார் 8.4 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ என்ற விசேட கஞ்சா வகை போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சரக்கு சேவை மூலம் கனடாவில் வசிக்கும் ஒருவரால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட இரண்டு மரப்பெட்டிகளின் அடிப்பகுதியில் நிரப்பப்பட்டிருந்த குஷ் போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது, இரண்டு மரப்பெட்டிகளின் போலியான அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12 கிலோகிராம் எடையுள்ள 24 குஷ் பொதிகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த பொருட்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்காக பொருட்களின் உரிமையாளரால் அங்கீகரிக்கப்பட்ட எழுதுவினைஞர் வந்திருந்தார்.

அவரும் போதைப்பொருளுடன் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular