03 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2023/05/Tiran-Alles-copy.jpg)
பொது பாதுகாப்பு அமைச்சில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதேச செயலகங்களில் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிக்க மேலும் 50 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
![Passport delivery will be delay](https://lankanvibe.com/wp-content/uploads/2023/02/hb.jpeg)
இதேவேளை, இரண்டு கடவுச்சீட்டுகளுடன் நாட்டிற்குள் பிரவேசித்ததாகக் கூறப்படும் சீனப் பிரஜை இன்று அழைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.
சீன தூதரகத்தின் ஆலோசனையுடன் அவர் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.