Saturday, July 27, 2024
HomeTamilயாழில் கோரவிபத்து : பெண் படுகாயம்!!

யாழில் கோரவிபத்து : பெண் படுகாயம்!!

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ் நல்லூர் ஆலயத்திற்கு முன்பக்கமாகவுள்ள பருத்திதுறை வீதியும் செம்மனி வீதியும் இணைகின்ற முத்திரைப் சந்தியில் திங்கட்கிழமை (08) காலையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியில் தரித்து நின்றிருந்த கார் திடிரென சடுதியாக திருப்ப முற்பட்ட போது வீதியால் துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த பெண் மீது மோதியதில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் துவிச்சவண்டியில் பயணித்த பெண் பலத்த காயமடைந்து இரத்தம் வழிந்தோடிய நிலையில் அந்த வீதியால் சென்றவர்களும் அப்பகுதியில் உள்ளவர்களுமாக இணைந்து காயமடைந்தவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular