லைக்கா குழுமத்தின் உரிமையாளரான அல்லிராஜா சுபாஸ்கரன் நேற்று முன்தினம் இலங்கை வந்தடைந்தார்.
சனல் ஐ யின் ஒளிபரப்பு நேரம் லைக்கா குழுமத்திற்கு குறுகிய கால அடிப்படையில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்ததையடுத்து அவர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.