Friday, July 26, 2024
HomeTamilஅனுர மனதுங்க பதவி விலகல்!!!

அனுர மனதுங்க பதவி விலகல்!!!

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க பதவி விலகியுள்ளார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அனுர மனதுங்க கடிதம் ஒன்றின் மூலம் தமது பதவி விலகலை அறியப்படுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், ஜனாதிபதிக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களின் காணி தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

முல்லைத்தீவு தன்னிமுறிப்பு விகாரை அமைந்துள்ள காணி தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அதுகுறித்து ஜனாதிபதி தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மனதுங்க, குறித்த விகாரை தற்போது 72 ஏக்கர் காணி பரப்பை கொண்டுள்ளது. இதனை தவிர மேலும் 275 ஏக்கர் பரப்பு நிலம் விகாரை சார்பில் கோரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

எனினும், இதனை மறுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜேத்தவனாராமய, மஹா விகாரை மற்றும் அபயகிரி விகாரை என்பனவற்றை இணைத்துப்பார்த்தாலும் 100 ஏக்கர் காணியே இருக்கும்.

அவ்வாறெனில் குறித்த விகாரைகளை விடவும் அளவில் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு விகாரை பெரியதா? என கேள்வி எழுப்பினார்.

அத்துடன், வரலாற்றை நீங்கள் எனக்கு கற்றுத்தருகின்றீர்களா? இல்லை நான் உங்களுக்கு கற்றுத்தர வேண்டுமா? எனவும் ஜனாதிபதி கடுமையாக அவரை சாடியிருந்தார்.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில், இன்றைய தினம் வெளியாகியிருந்த நிலையில், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular