Saturday, July 27, 2024
HomeTamil2024 ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் வாரம் சபையில் முன்வைக்கப்படும்!!

2024 ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் வாரம் சபையில் முன்வைக்கப்படும்!!

2024 ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் 13ஆம் திகதி பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அன்றைய தினம் மதியம் பாதீடு தொடர்பான உரையை நிகழ்த்துவார் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

பாதீட்டின் 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அத்துடன், 2024ஆம் ஆண்டு பாதீட்டுக்கான மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இதற்கமைய, டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாலை பாதீட்டுக்கான இறுதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular