அத்துருகிரியே ஜெரம்’ என்ற பாதாள உலகக்குழு உறுப்பினர் விசேட அதிரடிப்படையினரால் அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மற்றும் அத்துருகிரிய பிரதேசத்தில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக இவருக்கு எதிராக பிடியாணை பெறப்பட்டிருந்தது.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (5) பிற்பகல் போதைப் பொருள் கடத்தல் மற்றும் சில குற்றங்களுக்காக தேடப்பட்ட குறித்த சந்தேக நபரை அத்துருகிரிய மிலேனியம் சிட்டி பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் அங்கொட லொக்காவின் பிரதான உதவியாளர் எனவும், அவர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் உறுப்பினர் எனவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அத்துரிகிரிய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.