Saturday, July 27, 2024
HomeTamilசீரற்ற காலநிலை: 55,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு!!

சீரற்ற காலநிலை: 55,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு!!

நாடு முழுவதும் அண்மைய நாட்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 12 மாவட்டங்களில் 55,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 13,627 குடும்பங்களைச் சேர்ந்த 55,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தினால் 41,951 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கம்பஹா மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசமாக உள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள சமீபத்திய நிலவர அறிக்கையின்படி, சீரற்ற காலநிலையால் 705 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட 352 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நிலையம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular