2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 38 ஆவது போட்டி இன்று (06) இடம்பெறுகின்றது.
குறித்த போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்துள்ளது.
இந்தநிலையில் ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் இரண்டு அணிகளும் இதுவரை 4 முறை மோதியுள்ளன.
இதில் இலங்கை அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன் ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.