Saturday, July 27, 2024
HomeTamilபேருந்து விபத்தில் மூவர் பலி!!!

பேருந்து விபத்தில் மூவர் பலி!!!

சிவனொளிபாதமலை யாத்திரை சென்று திரும்பிய பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் முன்னதாக இரு பெண்கள் உயிரிழந்த நிலையில், தற்போது ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

கொழும்பின் மற்றும் மஹரகமையில் இருந்து சிவினொலிபாத மலைக்கு சென்றவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் சம்பவ இடத்திலிருந்து குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த ஏனைய இரு பெண்களும் தெலிஜ்ஜவில மற்றும் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 26 வயதான இருவரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நோட்டன் ப்ரிட்ஜ் – தியகல, டெப்லா பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 23 பேர் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையிலும், ஒருவர் பேராதனை வைத்தியசாலையிலும், மற்றுமொருவர் கண்டி போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலம் இன்று காலை குறிப்பிட்டது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular