எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்துகட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியன தெரிவிக்கின்றன.
தனியார்பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திலான் மிரென்டா ஆகியோர் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை நாளை மறுதினம் (31) முதல் 30 ரூபாவாக குறைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு, போக்குவரத்து அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
புதிய விலை திருத்தம் தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதன்படி, பஸ் கட்டணம் திருத்தம் தொடர்பான அறிவிப்பு வெகுவிரைவில் வெளியிடப்படும் என அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
எரிபொருள் விலை குறைப்புக்கு ஏற்ற வகையில் போக்குவரத்து கட்டணம் மற்றும் உணவு பொருட்களின் விலைகளை குறைக்குமாறு தாம் கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com