பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட மாணவர்கள் 11 பேருக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இணைந்த புதிய மாணவர்களுக்கு பழுதடைந்த உணவினை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர், பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.
முறையான விசாரணை நடத்தி மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழகத்தின் பிரதிவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.