கொம்பனித்தீவு மற்றும் கொள்ளுப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.
இந்த பிரச்சினை காரணமாக தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
தண்டவாளத்தை உடனடியாக சரிசெய்து சேவைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.