நாட்டில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2023/01/158657-corona-virus.jpeg)
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் 6 இலட்சத்து 72 ஆயிரத்து 221 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
இதேவேளை,கொரோனா தொற்றினால் நேற்று முன்தினம் (5) மூவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன்,நேற்றுமுன்தினம் (5) 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், நேற்றைய தினம் 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.