மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த காவல்துறை மா அதிபராக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுப் பாதுகாப்பு அமைச்சுக்கு இதை அறிவித்தார்.
36 ஆவது காவல்துறை மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை நியமிக்க ஜனாதிபதி சிபாரிசு செய்துள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன.
இதன்படி, தற்போதைய காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஓய்வு பெற்றதன் பின்னர், தேசபந்து தென்னகோன் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
தற்போதைய காவல்துறை மா அதிபர் சீ டி விக்ரமரத்ன இம்மாதம் 25 ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ளமை குறி்பபிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com