சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜூரியின்றி விசாரணை நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
32 வயதான தனுஷ்க குணதிலக டி20 உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்கச் சென்று சிட்னியில் இருந்தபோது, பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த இந்தக் கோரிக்கை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 24ஆம் திகதி வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.