Saturday, July 27, 2024
HomeTamilதுருக்கியை மீண்டும் தொடரும் சோகம் - பாரிய நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் பலி!!!

துருக்கியை மீண்டும் தொடரும் சோகம் – பாரிய நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் பலி!!!

துருக்கியின் தெற்கு பகுதியில் நேற்றைய தினம் 6.4 மெக்னிடியுட் அளவில் மற்றுமொரு நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது

அந்த நாட்டு நேரப்படி நேற்றிரவு 8.04 அளவில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக மூவர் பலியானதுடன் துருக்கி மற்றும் சிரியாவில் 680க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட தடவை நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

கடந்த 6ஆம் திகதி அங்கு ஏற்பட்ட 7.8 மெக்னிடியுட் அளவிலான நிலஅதிர்வில் துருக்கி மற்றும் சிரியாவில் 44 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர்.

இந்தநிலையில் நேற்றைய தினம் மற்றுமொரு நில அதிர்வு ஏற்பட்டுள்ளதுடன், ஆபத்தான கட்டிடங்களுக்குள் செல்ல வேண்டாம் என அந்த நாட்டு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

துருக்கியில் ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular